ஆறும் அது ஆழம் இல்ல

படம் : முதல் வசந்தம் 
இசை : இளையராஜா  
பாடியவர் : உமா ரமணன்
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே

ஆறும் அது ஆழம் இல்ல...

தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல...
இப்பாடலின் வீடியோ இங்கே..

உச்சி வகுந்தெடுத்து

படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
இசை: இளையராஜா
பாடியவர் : S.P.B


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.
உச்சி வகுந்தெடுத்து...
பெண் குரல் - ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...
ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..
ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ...
பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திரிஞ்சி போனதுனு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.
- (உச்சி வகுந்தெடுத்து

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.
உச்சி வகுந்தெடுத்து...
ஆண் குரல் - நானனனா நானனனாநனனா ஹேய்ய்.
நான ஹேய்ய்ய்
நானனனா நானனனானா ஹேய்ய்.

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கரையான் தின்னிருக்க ஞியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.
உச்சி வகுந்தெடுத்து...
இப்பாடலின் வீடியோ இங்கே..

நில் நில் நில் பதில் சொல்

படம்: பாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடல்: இளையராஜா, உமா ரமணன்


நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்

பூவே செம்பூவே உன் வாசம்

படம்: சொல்லத் துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே...

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே...

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

செவ்வானம் சின்னப்பெண் சூடும்

படம் : பவித்ரா
வரிகள் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரகுமான்

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செவ்வானம்...

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

செவ்வானம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்ன சின்ன மழை துளிகள்

படம்: என் சுவாச காற்றே
இசை:
ஏ. ஆர். ரகுமான்
பாடியவர்: ஸ்ரீ குமார்

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோசின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
சின்ன சின்ன மழை துளிகள்..
சிறு பூவினில் விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கண்ணி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ


சின்ன சின்ன மழை துளிகள்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

நான் தேடும் செவ்வந்தி பூவிது...

படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்
கள் : இளையராஜா, ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்..

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

நான் தேடும்..

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும்..




இப்பாடலின் வீடியோ இங்கே..

அந்த நிலாவ தான் நான்

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
அந்த நிலாவ தான்..
ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக முந்தியில பந்தி வைக்கவா
மாசத்துல மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கைஇருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு
அந்த நிலாவ தான்..
வெல்ல வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
கட்டழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சி
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூன்ஜோல
பூவு ஒன்னு கனசச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான்..

ஏதோ நினைவுகள் கனவுகள்..

படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....

ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..




இப்பாடலின் வீடியோ இங்கே..

என் கண்மணி என் காதலி...

படம்: சிட்டுக்குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P. சுசிலா, பாஸ்கர், கோவை பாபு
என் கண்மணி என் காதலி இள மாங்கனிஉனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதேநான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோநீ நகைச்சுவை மன்னனில்லையோநல்லா சொன்னீர் போங்கோ..
என் மன்னவன் என் காதலன்ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோநீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மாபிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மாஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..இளமாலையில்..அருகாமையில்..வந்தாடும் வேளை இன்பம் கோடியின்றுஅனுபவம் சொல்லவில்லையோ..இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
என் மன்னவன்..
என் கண்மணி..
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமேதிருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமேஅதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமேஅடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமேஇரு தோளிலும் மணமாலைகள்கொண்டாடும் நேரமென்று கூடுமென்றுதவிக்கின்ற தவிப்பென்னவோஎன் கண்மணி..என் மன்னவன்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத மேகம்...

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம்..


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..



இப்பாடலின் வீடியோ இங்கே..

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...

படம் : சில்லுனு ஒரு காதல்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்வரிகள் : வாலி



நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்,
தனிமை அடர்ந்தது, பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே, நானும் மெழுகுவத்தீயும்
தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ

நியூ யார்க் நகரம்...
 
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஓரு முத்தம் தந்து, காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவல் எடுக்க நீ இங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னைத் தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே, நீயும் அங்கே; இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ?
வான் இங்கே, நீலம் அங்கே, இந்த உவமைக்கு இருவரும் விளக்கம் ஆனதேனோ?
நியூ யார்க் நகரம்...
 
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்னத் தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்தத் தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே, நீயும் வந்தால் செந்தணல் கூடப் பனிக்கட்டி போலே மாறுமே
நியூ யார்க் நகரம்...

இப்பாடலின் வீடியோ இங்கே..

ராஜ ராஜ சோழன் நான்...

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்..
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி
ராஜ ராஜ சோழன் நான்..
கல்லூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமேதுள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் இன்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாகிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி
ராஜ ராஜ சோழன் நான்..
 
இப்பாடலின் வீடியோ இங்கே..

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..

என்ன சத்தம்..


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம்..


கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்

என்ன சத்தம்..

இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்ன மணிக்குயிலே ....

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே..

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை...

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில்..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..

பூங்காற்றிலே..

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ந்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா...

பூங்காற்றிலே..

கண்ணில்..

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் போகும் முன்னே
ஓடோடி வா..
பூங்காற்றிலே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூக்கள்...

வள்ளுவன் வாக்கை போல, இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல். எத்தனையோ பூக்களை புகைபடத்தில் அல்லது இயற்கையாய் பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் நம் கையால் நட்டு வைத்து, சற்று வளர்ந்து பூக்கும் பூவிதழ்களை காணும் சமயம் இதயத்தில் உண்டாகும் ஆனந்தமானது எல்லையற்றது உண்மையாகும்.

அதனை உணர்ந்தேன் சிலநாட்களுக்கு முன்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் பரமானந்தம் அடைவேன் என்ற நம்பிக்கையோடு. என் எழுத்தின் வழியே உங்களை அவ்வாறு இக்கணம் இழுத்து செல்லாவிடினும் உங்கள் மனதில், ஒரு பூந்தொட்டியில் நீங்களும் செடி வளர்த்து அதன் மலர்முகத்தை காணவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அதுதான் என் நோக்கம்.

இதோ!

அவளை கண்ட முதல்நாள் போல், வாசலில் தள்ளுவண்டியில் பலவிதமான பூந்தொட்டிகளை வரிசையாய் அலங்கரித்து அதனை விற்று சென்ற காட்சியனது கல்லூரி வாசலில் கூடும் பருவ பெண்களை பார்த்த ஒர் ஏக்கம். கூட்டத்தில் நெரிசலில் முதல்நாள் நான் கண்ட  அவளின் முகத்தை போல் நான் பார்த்த அந்த செடியின் மீது மயக்கம் என்னுள் தோன்றியது.

அடைந்தாள் அவளை அடைய வேண்டும் என்நினைக்கும் மனதைபோல, அந்த செடியை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றியது. அவள் கேட்பதெல்லாம் வாங்கி தரவேண்டும் என்ற நினைப்பு போல் அந்த செடி விற்பவன் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் பேசாமல் வாங்கிவந்தேன்.

அவள்மீது கொண்ட காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததைபோல், நான் வாங்கி வந்த செடியினை வைக்க இடமில்லாமல் யோசித்தேன். நண்பர்களுக்கு பிறகு உடன்பிறப்புகளுக்கு தெரியவருவதைபோல தோட்டமில்லாமல் என் வீட்டின் முன்முற்றத்தில் இடமிருப்பதை நினைவில்கொண்டேன்.அங்கே அதற்கோர் இடமளித்தேன், என் இதயத்தில் அவளுக்கு அளித்தைபோல்.

தினமும் காலையும் மாலையும் அவளை காண செல்வதைபோல, இருவேளையும் தண்ணீர் ஊற்றி தொட்டியில் செடியையும் மனதில் அவள் நினைவுகளையும் கொண்டேன். அவளைகாணாமல் என்மனம் என்ன பாடுபடுமோ அதுபோல் வெயில் அடித்தால் எங்கிருந்தாலும் ஏங்குவேன். அவள் முகம் பார்க்க துடிக்கும் சமயம் போல், சூரியன் எப்ப மறைவான் என்று தவித்தேன் பலநாட்கள்.

அவளின் பார்வையும் என்மேல் விழுந்த மகிழ்ச்சிபோல், செடியில் தோன்றிய முதல் மொக்கினை கண்டு மகிழ்ந்தேன். என்னுள் காதல் வளர்ந்தது போல் மொக்கும் பூக்கும் நாள்வந்தது. என்காதலும் வீட்டிற்கு தெரியவந்தது போல்.

இரவெல்லாம் கண்விழித்து சூரியன் எப்போ வருவான் என்று பதறினேன். நான் அவளை பெண் பார்க்க செல்ல துடித்த நாழிகை போல். கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன், பெண் காப்பி கொண்டுவரும் நிகழ்ச்சி போல். பூத்திருக்கும் அந்த மஞ்சள் நிற மலரை கண்டது, பெண்ணிடம் தனியாக ஏதோ பேசி விட்டு மனம் கலந்து சம்மதம் பெற்றதை போல்.

கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாதங்கள் கழிந்தது போல, நாட்கள் நகர தொடங்கியது, எனக்கு பிறந்த ஒர்குழந்தையை போல செடியில் இரண்டு, மூன்று என பூக்க தொடங்கின. குழந்தையின் மழலைசொல் போல பூக்களின் வாசம் என்னுள் வீசியது.

இன்றும் வீசிக்கொண்டே... உங்களின் வாழ்கையிலும் வீசிட...













இவன்,
தஞ்சை.வாசன்.

சங்கீத வானில்...

படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே..

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..
நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்
கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே..
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..
உன்னில் தினம் உடல் கரைகின்றதே..
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே...
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...

சங்கீத வானில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

வாசகமாய் வாசம் வீசி உங்களை அடைய...

இந்த வலைபக்கத்திற்க்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் இந்தபூங்கொத்தை கொடுத்து வரவேற்கின்றேன். கவிதைகளை அங்கே தொடர்ந்தும் மற்றும் பல்வேறு வகையான தொகுப்புகளுடன் இங்கே உங்களை காண்பதில் இந்தபூவைபோல மகிழ்ச்சியும் அடைக்கின்றேன்.

தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் எதிர்நோக்கி ஆவலுடன்.