ராஜ ராஜ சோழன் நான்...

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்..
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி
ராஜ ராஜ சோழன் நான்..
கல்லூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமேதுள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் இன்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாகிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி
ராஜ ராஜ சோழன் நான்..
 
இப்பாடலின் வீடியோ இங்கே..

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..

என்ன சத்தம்..


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம்..


கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்

என்ன சத்தம்..

இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்ன மணிக்குயிலே ....

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே..

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை...

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில்..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..

பூங்காற்றிலே..

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ந்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா...

பூங்காற்றிலே..

கண்ணில்..

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் போகும் முன்னே
ஓடோடி வா..
பூங்காற்றிலே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூக்கள்...

வள்ளுவன் வாக்கை போல, இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல். எத்தனையோ பூக்களை புகைபடத்தில் அல்லது இயற்கையாய் பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் நம் கையால் நட்டு வைத்து, சற்று வளர்ந்து பூக்கும் பூவிதழ்களை காணும் சமயம் இதயத்தில் உண்டாகும் ஆனந்தமானது எல்லையற்றது உண்மையாகும்.

அதனை உணர்ந்தேன் சிலநாட்களுக்கு முன்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் பரமானந்தம் அடைவேன் என்ற நம்பிக்கையோடு. என் எழுத்தின் வழியே உங்களை அவ்வாறு இக்கணம் இழுத்து செல்லாவிடினும் உங்கள் மனதில், ஒரு பூந்தொட்டியில் நீங்களும் செடி வளர்த்து அதன் மலர்முகத்தை காணவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அதுதான் என் நோக்கம்.

இதோ!

அவளை கண்ட முதல்நாள் போல், வாசலில் தள்ளுவண்டியில் பலவிதமான பூந்தொட்டிகளை வரிசையாய் அலங்கரித்து அதனை விற்று சென்ற காட்சியனது கல்லூரி வாசலில் கூடும் பருவ பெண்களை பார்த்த ஒர் ஏக்கம். கூட்டத்தில் நெரிசலில் முதல்நாள் நான் கண்ட  அவளின் முகத்தை போல் நான் பார்த்த அந்த செடியின் மீது மயக்கம் என்னுள் தோன்றியது.

அடைந்தாள் அவளை அடைய வேண்டும் என்நினைக்கும் மனதைபோல, அந்த செடியை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றியது. அவள் கேட்பதெல்லாம் வாங்கி தரவேண்டும் என்ற நினைப்பு போல் அந்த செடி விற்பவன் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் பேசாமல் வாங்கிவந்தேன்.

அவள்மீது கொண்ட காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததைபோல், நான் வாங்கி வந்த செடியினை வைக்க இடமில்லாமல் யோசித்தேன். நண்பர்களுக்கு பிறகு உடன்பிறப்புகளுக்கு தெரியவருவதைபோல தோட்டமில்லாமல் என் வீட்டின் முன்முற்றத்தில் இடமிருப்பதை நினைவில்கொண்டேன்.அங்கே அதற்கோர் இடமளித்தேன், என் இதயத்தில் அவளுக்கு அளித்தைபோல்.

தினமும் காலையும் மாலையும் அவளை காண செல்வதைபோல, இருவேளையும் தண்ணீர் ஊற்றி தொட்டியில் செடியையும் மனதில் அவள் நினைவுகளையும் கொண்டேன். அவளைகாணாமல் என்மனம் என்ன பாடுபடுமோ அதுபோல் வெயில் அடித்தால் எங்கிருந்தாலும் ஏங்குவேன். அவள் முகம் பார்க்க துடிக்கும் சமயம் போல், சூரியன் எப்ப மறைவான் என்று தவித்தேன் பலநாட்கள்.

அவளின் பார்வையும் என்மேல் விழுந்த மகிழ்ச்சிபோல், செடியில் தோன்றிய முதல் மொக்கினை கண்டு மகிழ்ந்தேன். என்னுள் காதல் வளர்ந்தது போல் மொக்கும் பூக்கும் நாள்வந்தது. என்காதலும் வீட்டிற்கு தெரியவந்தது போல்.

இரவெல்லாம் கண்விழித்து சூரியன் எப்போ வருவான் என்று பதறினேன். நான் அவளை பெண் பார்க்க செல்ல துடித்த நாழிகை போல். கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன், பெண் காப்பி கொண்டுவரும் நிகழ்ச்சி போல். பூத்திருக்கும் அந்த மஞ்சள் நிற மலரை கண்டது, பெண்ணிடம் தனியாக ஏதோ பேசி விட்டு மனம் கலந்து சம்மதம் பெற்றதை போல்.

கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாதங்கள் கழிந்தது போல, நாட்கள் நகர தொடங்கியது, எனக்கு பிறந்த ஒர்குழந்தையை போல செடியில் இரண்டு, மூன்று என பூக்க தொடங்கின. குழந்தையின் மழலைசொல் போல பூக்களின் வாசம் என்னுள் வீசியது.

இன்றும் வீசிக்கொண்டே... உங்களின் வாழ்கையிலும் வீசிட...













இவன்,
தஞ்சை.வாசன்.

சங்கீத வானில்...

படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே..

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..
நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்
கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே..
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..
உன்னில் தினம் உடல் கரைகின்றதே..
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே...
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...

சங்கீத வானில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

வாசகமாய் வாசம் வீசி உங்களை அடைய...

இந்த வலைபக்கத்திற்க்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் இந்தபூங்கொத்தை கொடுத்து வரவேற்கின்றேன். கவிதைகளை அங்கே தொடர்ந்தும் மற்றும் பல்வேறு வகையான தொகுப்புகளுடன் இங்கே உங்களை காண்பதில் இந்தபூவைபோல மகிழ்ச்சியும் அடைக்கின்றேன்.

தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் எதிர்நோக்கி ஆவலுடன்.