உச்சி வகுந்தெடுத்து

படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
இசை: இளையராஜா
பாடியவர் : S.P.B


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.
உச்சி வகுந்தெடுத்து...
பெண் குரல் - ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...
ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..
ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ...
பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திரிஞ்சி போனதுனு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.
- (உச்சி வகுந்தெடுத்து

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.
உச்சி வகுந்தெடுத்து...
ஆண் குரல் - நானனனா நானனனாநனனா ஹேய்ய்.
நான ஹேய்ய்ய்
நானனனா நானனனானா ஹேய்ய்.

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கரையான் தின்னிருக்க ஞியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.
உச்சி வகுந்தெடுத்து...
இப்பாடலின் வீடியோ இங்கே..

0 comments:

Post a Comment